சமீப காலமாக பார்தி ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து சந்தையை இழந்து வரும் நிலையில், 3ஜி சேவையை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் நம்பர் 1 தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்த ஏர்டெல் தற்போது மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருவாயை பெருக்கும் நடவடிக்கையாக 3ஜி சேவையை நிறுத்திவிட்டு வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்கு திருப்பும் பணிகளில் ஏர்டெல் இறங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை முதல் ஏர்டெல் 3ஜி சேவையை நிறுத்தியுள்ளது.
மேலும், பிற நகரங்களுக்கும் 3ஜி சேவை நிறுத்தப்பட வாய்ப்புள்ளது, இருப்பினும் 2ஜி சேவை தொடர்ந்து கிடைக்கும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.
தற்போது கிராமப்புறங்களில் ஃபீயூச்சர் போன்களையே பயன்படுத்தி வரும் அனைவரையும் 4ஜி-க்கு மாற்றுவது எளிதல்ல என்பதால் 2ஜி சேவையை மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் குறைந்தது மாதத்திற்கு 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஏர்டெல்லின் மொத்த வாடிக்கையாளர்களில் 70 சதவீதத்தினர் 2ஜி அல்லது 3ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
ஏர்டெல் நிர்வாகத்தின் கணிப்பின்படி, 3ஜி சேவையை நிறுத்தும் போது பெரியதாக வாடிக்கையாளர்கள் வெளியேற மாட்டார்கள். அவர்களை எளிதாக 4ஜி சேவைக்கு மாற்றிவிடலாம், செலவும் குறையும் என அறியப்படுகிறது.
தற்போதைய நிலையில், இந்தியாவில் முழுமையாக 4ஜி சேவையை மட்டும் வழங்கும் நெட்வொர்க்காக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Airtel to stop 3G service only..soon